புதுவையில் அரசு வேலை இல்லாத இளைஞர்கள் - வேலை வாய்ப்பு அலுவலகம் பூட்டு போட்டு,பெயர் பலகை கருப்பு மை இட்டு அழித்து, வேலை வாய்ப்பு பதிவு அட்டைய்களை எரித்து,வேலை வாய்ப்பு பதிவு அட்டைய்களால் நாக்கு வழித்து,வேலை வாய்ப்பு அதிகாரிக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்
புதுவையில் அரசு வேலை இல்லாத இளைஞர்கள் - வேலை வாய்ப்பு அலுவலகம் பூட்டு போட்டு,பெயர் பலகை கருப்பு மை இட்டு அழித்து, வேலை வாய்ப்பு பதிவு அட்டைய்களை எரித்து,வேலை வாய்ப்பு பதிவு அட்டைய்களால் நாக்கு வழித்து,வேலை வாய்ப்பு அதிகாரிக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டைய்களை மாலையாக போடும் போராட்டம்.
தேதி : 29-11-2013 வெள்ளி கிழமை
நேரம் : காலை 10 மணிக்கு
இடம் : வேலை வாய்ப்பு அலுவலகம்,வழுதாவூர் ரோடு,புதுவை.
ஒருங்கிணைப்பு : திரு.தியாகராஜ் (பா.ஜ.க,இளைஞரணி)
தலைமை : திரு.சக்திவேல் (பா.ஜ.க,இளைஞரணி,)
சிறப்பு அழைப்பாளர்கள் : திரு.விஸ்வேஸ்வரன்,( தலைவர், பா.ஜ.க,புதுவை)
திரு.சாமிநாதன்,(செயலாளர், பா.ஜ.க,புதுவை)
பொது மக்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள்,வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பல பல வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காதவர்கள்,இதுவரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கண் துடைப்புக்கு கூட ஒரு கடிதம் பெறாதவர்கள்,தகுதிகள் அனைத்தும் இருந்தும் புதுவையில் அரசாங்க வேலை பெறாதவர்கள்,திருட்டு வழியில் உங்களுக்கு தெரிந்தவர்கள் அரசாங்க வேலை பெற்ற போதும் கைக்கட்டி வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:-பீர்,பிரியாணி பொட்டலம்,பணம் கொடுக்கும் ரௌடி அரசியல்வாதிகள் கூட்டும் கூட்டம் அல்ல இது.
பொது மக்களின் வலியை உணர்ந்த தலைவர்கள் கூட்டும் கூட்டம்.சாதி,மத,இன,தொகுதி,கட்சி சார்பற்ற மக்களுக்காக மக்களே வீதியில் இறங்கி போராடும் போராட்டம் இது.
நேர்மையான சமூக சிந்தனையுள்ள,பொது மக்களின் வலியை உணர்ந்த அனைவரும் பங்கேற்பார்கள் என்று நம்புவோம்.
நன்றி.