Puduvai Mooligai Maiyam
இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், மண்புழு உரம், பண்ணைக்கழிவுகள், பிண்ணாக்கு வகைகள், தழை உரம், அசோலா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவது அவசியம். உயிரியல் பூஞ்சாண மருந்துகளாக சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல், கலப்புப் பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி மற்றும் பொறிப்பயிர் சாகுபடி செய்யலாம்.